மத்திய அரசின் பத்திரங்களில் வங்கிகள் செய்யும் முதலீட்டின் வளர்ச்சி, கடந்த 35ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் 1.9 சதவீதம் என்ற மிகக்குறைவான வளர்ச்சி, 1985-86 நிதியாண்டிற்குப்பின் இவ்வாண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.கடன்கள் உயர்வுவேறு முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், வங்கிகளின் முதலீடு குறைந்துள்ளது என்பதாக வணிக ஊடகங்கள் இச்செய்தியைஅணுகுகின்றன. அதைப்போலவே, தொழில்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் வளர்ச்சி என்பது கடந்த ஆண்டின் 10.3 சதவீதத்திலிருந்து, 13.2 சதவீதமாக மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.கடன்கள் என்றதுமே, வராக் கடன்கள் நினைவுக்கு வருவதால், திரும்பி வராதவை என்று கருத வேண்டியதில்லை. ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில், தொழில்களுக்கான வங்கிக் கடன்களின் வளர்ச்சி என்பதுதொழில் வளர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும். இந்தக் கடன்களின் வளர்ச்சிக்கேற்ற தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பது வேறு பிரச்சனை.ரிசர்வ் வங்கி வாங்கியதுஆனால், வங்கிகள் வாங்காத அரசுப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய செய்தி. 2018-19நிதியாண்டில் மட்டும், ரிசர்வ் வங்கி ரூ.2.98 லட்சம்கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கியுள்ளது.கடந்த காலங்களைவிட இது மிக அதிகம். பணப்புழக்கத்தைப் பராமரிப்பதற்காகவே இவ்வளவு மதிப்பிற்குப் பத்திரங்களை வாங்கியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. பொதுச்சந்தைச் செயல்பாடுகளின்மூலம் வாங்கியது பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைதான்.அதிகரித்த ரொக்கப்பணப்புழக்கம் பணப்புழக்கம் என்பது நாணயமாகப் புழங்கும் பணம் மட்டுமல்ல என்றாலும், ரிசர்வ்வங்கி தெரிவித்திருக்கும் மற்றொரு தகவல் இங்குகவனிக்கத்தக்கது. அதாவது, நிதியாண்டின் இறுதியில் மக்களிடையே புழக்கத்திலிருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.21.22 லட்சம்கோடி. (ஏப்ரலில் அது 21.62 லட்சம் கோடியாகிவிட்டது!) கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது புழக்கத்திலிருந்த ரொக்கப்பணம் ரூ.17-18 லட்சம் கோடிதான் என்பதுதான்.கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலும்ரொக்கப்பணம் புழக்கத்திற்கு வந்துள்ளது என்பதிலிருந்து, ஒன்று ரொக்கப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தப்போவதாக மோடி அரசு கூறியதில் தோற்றுப்போய்விட்டது, அல்லது பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நோக்கம் வேறு எதுவாகவோ இருந்துள்ளது என்றுதான் கருதவேண்டியுள்ளது. நிச்சயமாக இரண்டாவதுதான் சரி என்பதும், அந்த மாபெரும் ஊழல் குறித்த முழுமையான விபரங்கள் நிச்சயம் ஒரு கட்டத்தில் வெளியாகும் என்பதுமே மறுக்க முடியாத உண்மைகள்.52 சதவீதம் ரிசர்வ் வங்கியிடமிருந்துரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு என்ன காரணம் கூறப்பட்டாலும், ரிசர்வ் வங்கியின் நிதியிலிருந்து ரூ.2.98 லட்சம் கோடி, அரசுக்குக் கிடைத்துள்ளது. முடிந்த நிதியாண்டில் பத்திர வெளியீட்டின்மூலம் அரசு திரட்டியுள்ள ரூ.5.71 லட்சம் கோடியில் இது 52.19 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தவிர, ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால ஈவு ஆக ரூ.28 ஆயிரம் கோடியைவலுக்கட்டாயமாக மத்திய அரசு பிப்ரவரி மாதத்தில் வாங்கியது. ரிசர்வ் வங்கி ஜூலையிலிருந்து ஜூன் வரையிலான ஆண்டைக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்துகிறது. டிசம்பரில் அரையாண்டுக் கணக்கைத் தணிக்கை செய்து முடித்தபோது கணக்கிடப்பட்ட உபரியை உடனடியாகத் தருமாறு அரசு நெருக்கடிகொடுத்து, ரூ.28 ஆயிரம்கோடியை வாங்கிக் கொண்டது.மேலே சொன்ன ரூ.2.98 லட்சம் கோடியுடன், இந்த ரூ.28 ஆயிரம் கோடியையும் சேர்த்தால், மொத்தம் ரூ.3.26 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு வசூலித்திருக்கிறது.உர்ஜித் பட்டேல்இப்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித்பட்டேல் பதவி விலகியதற்கான காரணமாகப் பேசப்பட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள்! ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருப்பதாக மத்தியஅரசு கருதிய ரூ.3.5 லட்சம் கோடியைத் தருமாறுநெருக்கடி கொடுத்ததாலேயே அவர் பதவி விலகினார் என்பது ஊரறிந்த மட்டுமல்ல, ஊரெல்லாம்பேசிய ரகசியம்!ரிசர்வ் வங்கியின் ஜூன் 2018 வரையான அதன்கணக்கில், நாணயம், தங்கம் ஆகியவற்றின் மறுமதிப்பீட்டு நிதியாக ரூ.6.92 லட்சம் கோடியும், அவசரகால நிதியாக ரூ.2.32 லட்சம் கோடியும் காணப்பட்டன. இவற்றைச் சுட்டிக்காட்டித்தான், ரூ.3.5 லட்சம் கோடியை மோடி அரசு கேட்டதாகதகவல்கள் கூறின.அவசரகால நிதியின் தேவைஅவசரகால நிதி என்பது, ரூபாய் மதிப்பு எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 2008-09இல்ரூ.1.99 லட்சம் கோடியாக இருந்த மறுமதிப்பீட்டு நிதி 2017-18இல் 6.92 லட்சம் கோடியாக, சுமார் மூன்றரை பங்காக வளர்ந்தாலும், அன்று ரூ.1.53லட்சம் கோடியாக இருந்த அவசரகால நிதி, இரண்டு பங்காகக்கூட வளராமல், ரூ.2.32 லட்சம்கோடியாகத்தான் உள்ளது என்பதே கவலைக்குரிய செய்திதான்.மறுபுறம், மறுமதிப்பீட்டு நிதி என்பது, தங்கம்,செலாவணி ஆகியவற்றின் மதிப்பில் ஏற்படும்மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்வதற்கானது. உண்மையில், ரிசர்வ் வங்கியிடமுள்ளதங்கம், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்புஉயரும்போது கிடைக்கும் லாபம் இதில்தான் சேரும். அதாவது, ரூபாய் மதிப்பு உயர்ந்தால் இது குறையலாம்.தேயும் ரூபாய்ஆனால், 2013இல் மோடி பதவியேற்பதற்கு முந்தையநாள் ஒரு டாலருக்கு ரூ.58.52 ஆகஇருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, அவரது பதவிக்காலம் முடிந்த மே மாதத்தில் ரூ.70.98ஐத் தொட்டது எனும்போது, இது அதிகமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், 2012-13இல் கையிருப்பிலிருந்த தங்கம், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்பில் 31 சதவீதத்தை மறுமதிப்பீட்டு நிதியாக ரிசர்வ் வங்கி வைத்திருந்த நிலை, 2017-18இல் 25 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.எனவே, இந்த நிதியிலிருந்து எடுப்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் என்பதால்தான், மோடி குழுமத்தால் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேலே பதவியைவிட்டுச் சென்றுவிட்டார். திடீரென்று 200 ரூபாய்நோட்டை எப்படி ஏடிஎம்மில் வைப்பது, ஒரேமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இரண்டு அளவுகளில் வெளியிட்டால் எந்திரம் மட்டுமல்ல, மனிதர்களே குழம்பிவிடுவார்கள் என்பனவற்றைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இன்றி மேகமூட்டத்தின் மறைவில் டிஜிட்டல் இந்தியாவிற்குச்சென்ற மோடி அரசால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா? அதனால்தான், எது எப்படிப்போனாலும், தான் கேட்ட தொகையை ஏதோ ஒரு வழியில் வசூலித்திருக்கிறது.முதன்முறையாக இடைக்கால ஈவுரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இடைக்கால ஈவு என்பதே கடந்த ஆண்டில்தான் முதன்முறையாக வழங்கப்பட்டது. அதாவது, எப்படியிருந்தாலும் ஆறு மாதம் கழித்து வரப்போகிற தொகையைக்கூட, இப்போதே வாங்கி செலவழிக்கிற நிலையில்தான் அரசின் நிதிநிலை இருந்திருக்கிறது என்பது எப்படிப்பட்ட மோசமான நிர்வாகத்தை மோடி அரசு நடத்தியிருக்கிறது என்பதற்கான உதாரணம்.பங்கு விற்பனை உள்ளிட்ட அனைத்திலும் உரிய விலை கிடைக்காவிட்டாலும், நிர்ணயித்த தொகைக்கு அடிமாட்டு விலைக்காவது விற்றது உள்ளிட்ட வருவாய்களுக்குப் பின்னரும் இத்தகைய நெருக்கடி நிலவியதால்தான், விதைநெல்லை விற்பதுபோல, ரிசர்வ் வங்கியின் அவசரகால நிதியையும் எடுத்து செலவிட முயற்சித்திருக்கிறது மோடி அரசு என்பதிலிருந்து, விடுதலை இந்திய வரலாற்றின் மிகமோசமான அரசு இதுதான் என்பது வெளிப்பட்டிருக்கிறது! இரண்டாவது இன்னிங்சில் இருக்கிற எல்லாவற்றையுமே விற்றுவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது... ஏராளமான களங்கள் காத்திருக்கின்றன... தயாராவோம்!